• Sep 20 2024

சிக்கலில் மாட்டிய ஆதிரை... மிரட்டும் குணசேகரன்... பதற்றத்தில் ஓடிய ஜனனி... அடுத்து நடக்கப் போவது என்ன..? விறுவிறுப்பான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சக்தி, ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் ஆதிரை register office இல் இருப்பதாகவும், அந்தபேப்பரில் ஆதிரை கையெழுத்து போட்டால் பெரிய சிக்கலாகி விடும் எனவும் பேசிக் கொள்கின்றனர்.


உடனே ஜனனியும் சக்தியும் பதற்றத்தில் அங்கிருந்து அவசரமாக கிளம்பிச் செல்கின்றனர். மறுபுறம் குணசேகரன் ஆதிரையிடம் "கையெழுத்து போட்டிற்று குலம் பிழைப்பதற்கான வழியைப் பார்க்குமாறு கூறுகின்றார். அதற்கு ஆதிரை "ஞானம் கிட்ட தனியாக பேசணும்" என்கிறார். பதிலுக்கு குணசேகரன் "ஞானம் கிட்ட அப்படி என்ன தனியாக பேசணும்" எனக்கேட்டு ஆதிரையை மிரட்டுகின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.  

Advertisement

Advertisement