சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
அதில் குணசேகரன் வீட்டிற்கு ஆடிட்டர் வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் குணசேகரன் "என்ன சார் பிரச்சினை, அடுத்து லிஸ்ட்டில் என்னத்தை சேர்த்திருக்கான், உயிர் போகுது சார் சொல்லுங்க" எனக் கேட்கின்றார்.
அதற்கு ஆடிட்டர் ஏதோ ஒரு விஷயத்தைக் கூறுகின்றார். அதனைக் கேட்டதும் குணசேகரன் உடனே நெஞ்சு வலியால் துடிதுடித்து விழுகின்றார். இதனையடுத்து வீட்டில் உள்ள அனைவரும் குணசேகரனை சூழ்ந்து கொள்கின்றனர்.
பதிலுக்கு கதிர் "யாரும் என் பக்கத்தில் வரக் கூடாது" எனக் கூறுகின்றார். பின்னர் கதிர் தானே குணசேகரனைத் தூக்கி தோளில் சுமந்து கொண்டு ஹாஸ்ப்பிட்டலுக்கு செல்ல வெளியே செல்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
இதனையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதனை எபிசோட்டின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
Listen News!