• Sep 20 2024

ஜீவானந்தம், தன்னுடைய ஆளு என்று சொன்ன அப்பத்தா- அதிர்ச்சியில் உறைந்து நின்ற குணசேகரன்-Ethirneechal - Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கான இன்றைய நாள் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஜீவானந்தத்தின் வீட்டைத் தேடி அடியாட்களுடன் கதிர் செல்கின்றார். மறுபுறம் ஜனனியும் செல்கின்றார். அப்போது ஜீவானந்தம் தன்னுடைய குழந்தையுடன் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.


மறுபுறம் அப்பத்தா கண்முழித்து விட்டதால் குணசேகரன் பேசு உனக்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்க, அப்பத்தா ஜீவானந்தம் எனக்காககத் தான் இதெல்லாம் பண்ணினாரு என்று சொல்கின்றார்.இதைக் கேட்ட எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.

அதே போல ஜீவானந்தம் தன்னுடைய வீட்டில் தனது மகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது கதிர் அடியாட்களுடன் உள்ளே நுழைந்ததால் அவர்களை அடிப்பதற்காக ஜீவானந்தமும் கட்டையை எடுக்கிற நேரம் ஒரு ரௌடி , துப்பாக்கியால் சுட்டு விடுகின்றார். இதைப் பார்த்த ஜனனி அதிர்ச்சியடைகின்றார். ஆனால் யாரை சுட்டார் என்பது தெரியவில்லை. இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement