சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.
மறுபுறம் விசாலாட்சி ஈஸ்வரியிடம் "நம்மளப்போட்டு அந்தப்பாடு படுத்தினானே அங்க போய் என்ன செய்யப்போறானோ" எனக்கூறி பதறுகின்றார். பதிலுக்கு ஈஸ்வரி "அங்க ஜனனி இருக்கா, அவ எல்லாத்தையும் பார்த்துப்பா" எனக் கூறினார்
ஆனால் நினைத்ததிற்கு மாறாக குணசேகரன் கூறியதற்கிணங்க கரிகாலன் நடுரோட்டில் வைத்து ஆதிரை கழுத்தில் தாலி கட்டி விட்டான். இதனைத் தொடர்ந்து ரிஜிஸ்டர் ஆபிஸிற்கு ஆதிரையையும் கரிகாலனையும் அழைத்துச் செல்கின்றனர்.
ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணம் ஆனதை அறிந்த விசாலாட்சி என் மகன் ஜெயிச்சிட்டான் நீ மொத்தமா தோத்து போய்ட்ட வந்த பேசுவாங்க பாரு என ஜனனியிடம் சொல்கின்றார்.மறுபுறம் ஆதிரை ரிஜிஸ்டர் ஆபிஸில் இது எனக்கு பிடிக்காத கல்யாணம் என்று சொன்னால் உங்களை எல்லாம் துாக்கி உள்ளே வச்சிடுவாங்க என்று சொல்லி திட்ட குணசேகரன் யோசிக்கின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!