சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் சக்தியும் ஜனனியும் புதிதாக தொழில் தொடங்கப் போக முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து விசாலாட்சியிடம் நல்ல நாள் பார்த்து சொல்ல சொல்கிறார்கள். இதனால் கோபமடைந்த குணசேகரன் "எனக்கு எதிரா வீட்ல பிரச்சினை செய்றது பத்தாதுன்னு எனக்கு எதிரா தொழில் வேற தொடங்க போறாங்களா" எனக் கேட்டுக் கத்துகின்றார்.
இதனையடுத்து ஞானமும் சக்தியிடம், உனக்கு என்ன தெரியும்னு இப்போ தொழில் தொடங்க போற. உன்னால நிர்வாகம் பண்ண முடியுமா? யார் பெயரில் தொழில் தொடங்க போற?" என கேட்கிறார். பதிலுக்கு ஜனனி, இனியும் நாம எதுக்கு சக்தி மறைச்சு மறச்சு செய்யணும் உண்மையை சொல்லு என சக்தியிடம் கூறுகின்றார்.
அதற்கு சக்தியும் "ஜனனி பெயரில் தான் தொடங்க போறோம், இரண்டு பேரும் சேர்ந்து தான் நிர்வாகம் செய்ய போகிறோம்" என்கிறார். பதிலுக்கு குணசேகரன், தொழில் தொடங்க அப்படியே பேங்க் மொத்த பணத்துக்கும் லோன் கொடுக்குதா? முதல் பணம் எங்கிருந்து வந்தது எனக்கேட்டு விடுப்பு பிடுங்குகின்றார். அதற்கு கதிர் "அந்த கிழவி தான் நம்ம கிட்ட இருந்து பிடுங்கி இதுங்க கிட்ட குடுத்து இருப்பா" என்கிறார்.
இதனால் பொறுமையிழந்த விசாலாட்சி "நான் தான் பா என்னோட நகையை கொடுத்து தொழில் தொடங்க சொன்னேன்" எனக் கூறுகின்றார். அதற்கு குணசேகரன், நான் என் சொந்த உழைப்பில் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு உனக்கு நகை போட்டு அழகு பார்த்தால் நீ அதை தூக்கி யாருக்கோ கொடுப்பியா. இது வரைக்கும் நீ எனக்கு ஏதாவது செய்து இருப்பியா" எனக்கேட்டு வார்த்தைகளால் விசாலாட்சியைக் காயப்படுத்துகிறார்.
பதிலுக்கு விசாலாட்சி, நான் உன்னை பத்து மாசம் சுமந்து பெத்துக்கலயா. நீ பொறக்கமலேவா இவ்வளவு சம்பாதிச்ச. நீ கஷ்டப்படும் போது நானும் உனக்கு உறுதுணையா தானே இருந்தேன். அதை எல்லாம் நான் சொல்லி காட்டினேனா" என கேட்கின்றார்.
உடனே குணசேகரன் "அப்போ என்னை உன்னோட கையாள கொன்னுடு" என்கிறார். இவர்களின் வாக்குவாதத்தைப் பார்த்த ஜனனி சக்தியிடம் அம்மாவின் நகைகளை திருப்பி கொடுக்க சொல்கிறார். ஆனால் விசாலாட்சி அதை வாங்க மறுக்கிறார். "யாரு என்ன சொன்னாலும் இந்த நகை உனக்கு தான்" என சக்தியிடம் சொல்கிறார்.
மேலும் குணசேகரனைப் பார்த்து "நீ சம்பாதிச்ச சொத்தை கொடுத்தா தான் தப்பு. ஆனா இது என்னுடைய அம்மா எனக்கு போட்ட நகை. இதை நான் விருப்பட்டவர்களுக்கு கொடுக்க எனக்கு உரிமை உள்ளது. ஏன் என்னை யாருமே இந்த வீட்டில் மதிக்கவே மாட்டேன் என்கிறீர்கள். என்னை இப்படி கொடுமை படுத்துவதற்கு பதில் என்னை உன் கையாலேயே கொன்னுடு" என கவலையுடன் கூறுகின்றார் விசாலாட்சி.
இதனைத் தொடர்ந்து ஞானம் சக்தியுடன் சண்டை போடுகின்றார். , மேலும் ஜனனி உன்ன நடு தெருவுல விட்டுட்டு போவா அப்போதான் அண்ணன்களோட அருமை உனக்கு தெரியும் எனவும் சக்தியிடம் கூறுகின்றார். பதிலுக்கு சக்தி, அப்போ கூட நான் என்னோட சொந்த காலில் தான் நிப்பேன். வசதியா வாழனும்னு இவங்களோட ஒட்டிக்கிட்டு இருக்க மாட்டேன். இவங்க காட்றது உண்மையான பாசம் இல்ல அவங்களோட சுயரூபம் தெரிந்தா தான் நீ திருந்துவ என ஞானத்திற்கு புத்தி கூறுகின்றார்.
பின்னர் கதிரும் சக்தியிடம் சண்டைக்கு வர உடனே சக்தி "ச்சீ வாயை மூட நீ செஞ்ச கிரிமினல் வேலையை எல்லாம் சொன்னா நீ நாண்டுக்கிட்டு தான் சாவ"என்கிறார். கதிர் என்ன செஞ்சுட்டான் என குணசேகரன் கேட்க "அது அவங்க அவங்க மனசாட்சிக்கு தெரியும்" என ஒளிவு மறைவாக ஜனனி கதிர் பற்றிக் கூறுகின்றார்.
ஆனாலும் இறுதி முடிவாக, இந்த வீட்ல ஆதி குரூப் ஆஃப் கம்பெனி மட்டும் தான் இருக்கனும் எனக் குணசேகரன் கூறுகின்றார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.
Listen News!