• Sep 20 2024

அடிமேல் அடி விழுந்திட்டே இருக்குப்பா... கண்கலங்கி அழும் குணசேகரன்... மனதை உருக்கும் வீடியோ.. வைரலாக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'யுத்தம் செய்' என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர மாரிமுத்து. ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’எதிர் நீச்சல்’ தொடரில் நடித்து வருகின்றார்.


இதில் இவர் நடித்து வரும் குணசேகரன் என்ற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஆதி குணசேகரனாக இவரின் நடிப்புக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் ட்ரெண்ட் ஆகின. அதிலும் குறிப்பாக இந்தாம்மா ஏய் என்கிற டயலாக் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியது.

இந்நிலையில் இந்த சீரியலில் இவர் நடித்த காட்சி ஒன்று ரசிகர்களை மிகவும் உருகியுள்ளது. அந்த வீடியோவைப் பதிவிட்டு அவர்கள் தங்களது இரங்கலினை மாரிமுத்துக்கு தெரிவித்து வருகின்றனர்.


அதாவது குறித்த அந்த வீடியோவில் குணசேகரன் கதிரிடம் "அடிமேல் அடி விழுந்திட்டே இருக்குப்பா, எத்தனை அடியைத்தான் சாமளிப்பேன், இந்த ஒத்த உடம்பு எத்தனையைத் தாங்கும்" எனக் கூறிக் கண் கலங்கி அழுகின்றார். இதனையடுத்து கதிர் அவருக்கு ஆறுதல் கூறுகின்றார்.

தற்போது இந்த வீடியோ காட்சியானது பலரைக் கண்கலங்க வைத்துள்ளது மட்டுமில்லாமல் ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியும் வருகின்றனர். இதோ அந்த வீடியோ..!  

Advertisement

Advertisement