"சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” என்று திரையில் மழலை மொழி மாறாத மென்மையான குரலில் ரயில் பாடல் பாடி பின் இசையமைப்பாளராக மாறி பின் ஒரு கதாநாயகனாக உயர்ந்தவரே ஜி.வி பிரகாஷ். மிக இளம் வயதில் இசையமைப்பாளராக ஆன காரணத்தாலோ என்னவோ இளமை ததும்பும் வகையில் காதல் பாடல்களை பாடுவதில் வல்லவராக இவர் இருக்கின்றார். தன்னுடைய இசை பயணத்தால் ரசிகர்களின் காதுகளுக்கு தேன் மழையை பொழிந்து கொண்டிருந்த ஜி.வி பிரகாஷிற்கு ஒரு மைக்கல்லாக அமைந்தது வெற்றிமாறனின் முதல் படைப்பான 'பொல்லாதவன்' என்ற படமே.
இவ்வாறாக இசையமைப்பாளராக இருந்து வந்த ஜி.வி பிரகாஷ் தற்போது ஒரு நடிகராகவும் மாறி இருக்கின்றார். ஆரம்பத்தில் சர்ச்சைக்குரிய படங்களில் மட்டும் தேடித் தேடி நடிக்கும் நடிகராக தெரிந்த ஜிவி பிரகாஷ், அதன்பிறகு தனது திறமையினால் நல்ல கதை கொண்ட படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்ற ஜி.வி பிரகாஷ் பற்றி தற்போது இயக்குநர்கள் பலரும் நையாண்டி பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
அதாவது "இவர் எல்லாரிடமும் பக்கத்து வீட்டு பையன் போல் என்ன நடந்தாலும் எதார்த்தமாக நடந்து கொள்வாராம். இதனால் இயக்குநர்களை பொறுத்தவரையில் ஜிவி பிரகாஷிற்கு தான் முன்னுரிமை, எல்லா படங்களிலும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் நடித்துக் கொடுப்பார். அதுமட்டுமல்லாது சம்பளமும் அதிகமாக கேட்க மாட்டார். இதனால் புதுமுக இயக்குநர்கள் பலரும் நண்பர்கள் போல் வந்து நிறைய பேர் இவரிடம் கதை சொல்லிவிட்டு செல்கிறார்களாம். புதுமுக இயக்குநர்கள் பலரின் முதல் தேர்வு ஜிவி பிரகாஷ் தான். எந்தக் கஷ்டமும் இல்லாமல் எளிதாக அவரை சந்திக்கலாம், சம்பளமும் அவ்வளவு அதிகமாக இவர் வாங்குவதில்லை. இவர் கமிட்டாகி நடிக்கும் படங்கள் அனைத்துமே நஷ்டத்தை பெற்று தராமல் போட்ட காசுக்கு ஏற்ப இலாபத்தை பெறுமளவிற்கு வசூலினை பெற்றுத் தந்து விடுகிறது" எனக் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது மேலும் "இவர் எந்த இயக்குநர் வந்து கதை சொன்னாலும் அவர்களின் கருத்தை மறுப்பதே இல்லையாம். அப்படி அப்படத்தில் இவர் நடிக்காவிட்டால் வேறு ஒருவரை பரிந்துரை செய்து, அப்படி பண்ணுங்கள், இப்படி பண்ணினால் நல்லா இருக்கும் என்று அவரே அவர்களுக்கு ரூட் போட்டுக் கொடுத்து விடுகிறாராம். தன்னை தேடி வருகிற எல்லா இயக்குநர்களும் பல கதைகளை வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லுகிறார்" எனவும் கூறுகின்றனர் இயக்குநர்கள்.
இவ்வாறாக ஜி.வி பிரகாஷ் எளிதில் நடிக்க சம்மதித்து விடுவார் என்று அவர்கள் இவர் மீது ஒரு முத்திரையை குத்தி வைத்திருக்கிறார்கள். அதனால் இதையறிந்த ஜி.வி பிரகாஷ் இப்பொழுது என்ன செய்வது எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருக்கிறார். இதன் காரணமாகத் தான் சமீபகாலமாகவே ஜிவி பிரகாஷ் பெரிய மன உளைச்சலில் இருப்பதாக தெரிய வருகிறது.
பிற செய்திகள்
- உடலில் துணியே இல்லாமல் விஜய் தேவரகொண்டா…வைரலாகும் போஸ்டர்..!
- 44 வயதில் கம்பேக்கா-ரசிகரின் கேள்விக்கு நச் என பதிலளித்த நடிகை பூஜா
- நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணமா? பெற்றோர் அளித்த பதில்
- ஹிப் ஹாப் ஆதியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…? இதோ புகைப்படம்…!
- திருமணத்திற்கு பிறகு ஷாருக்கானுடன் ‘அந்த’ காட்சியில் நடிக்கும் நயன்தாரா…வைரலாகும் தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!