• Sep 20 2024

திருமணத்திற்குப் பின் முதன் முதலாக... சிம்புவுடனான காதல் முறிவு குறித்து ஓப்பனாக பேசிய ஹன்சிகா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா. பல படங்களிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் கடந்தாண்டு டிசம்பர் 4-ஆம் தேதி சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 


இந்தத் திருமணமானது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா என்கிற 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இவர்களது திருமண வீடியோவை லவ் ஷாதி டிராமா என்கிற பெயரில் டாக்குமெண்ட்ரியாக தயாரித்து ஹாட்ஸ்டாரில் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.


இவர்களின் திருமணம் குறித்த டீசர் ஆனது கடந்த மாதம் வெளியாகி வைரல் ஆனது. அதில் ஹன்ஷிகா தான் சோஹல் கதூரியாவுக்கு இரண்டாவது மனைவியானது குறித்து மிகவும் எமோஷனலாக பேசி இருந்தார். அதாவது சோஹைலுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. அந்தவகையில் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை தான் அவர் முதலில் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் விவாகரத்தின் பின்னர் தான் ஹன்ஷிகா சோஹைலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இந்நிலையில் சமீபத்தில் லவ் ஷாதி டிராமா டாக்குமெண்ட்ரியின் டிரைலரானது வெளியானது. அதில் நடிகர் சிம்புவுடனான காதல் முறிவு குறித்து ஓப்பனாக ஹன்ஷிகா மனம் திறந்து பேசி உள்ளார் ஹன்சிகா. அதில் அவர் கூறுகையில் "நான் ஏற்கனவே ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தது அனைவருக்கும் தெரியும். அதை மீண்டும் செய்ய வேண்டாம் என நினைத்தேன், ஆனால் எதிர்பாராமல் அது நடந்துவிட்டது. ஆனால் இந்த முறை ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் அது கட்டாயம் திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தேன்” எனக் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில் "திருமணத்துக்கு முன் 19 நாட்கள் எரிமலை போன்று கொந்தளிப்பான மனநிலையில் தான் இருந்தேன். ஒரு பேப்பரும், பேனாவும் இருந்தால் போதும் அடுத்தவரின் வாழ்க்கையை நாசமாக்கிவிட முடியும் என நம்புகிறார்கள்" என அதில் ரொம்பவே எமோஷனலாக பேசி கண்கலங்கி உள்ளார் ஹன்சிகா.


அந்தவகையில் வாலு படத்தில் நடித்தபோது தான் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்தது. பின்னர் இருவருமே தங்களது காதல் குறித்து ஓப்பனாக பேசி இருந்தார்கள். ஆனாலும் ஹன்சிகாவின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு ஓகே சொல்லவில்லை. பின்னர் நாளடைவில் எதிர்பாராத விதமாக அந்த காதல் முறிவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement