தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஹன்சிகா. இவர் அஜித் ,விஜய், விஷால், சூர்யா கார்த்தி, சிவகார்த்திகேயன் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் தனது குறும்புத்தனமான நடிப்பினாலும் அழகினாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாகவும் வலம் வருகின்றார்.
சில காலம் திரைப்பட வாய்ப்பின்றி இருந்த இவர் தற்பொழுது சோலோ ஹீரோயினாக நடித்து வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் மஹா. இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
தற்போது குறைந்த படங்களையே கைவசம் வைத்துள்ள நடிகை ஹன்சிகா, சமீபத்தில் ஒரு தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதாகவும், அப்பபடத்தில் நடிக்க அவருக்கு ரூ.1.30 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்படப்பிடிப்பின்போது,அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும், இவர் பல கன்டிஷன்களை விதித்து வருவதாகவும், அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
பிற செய்திகள்
- திருமணம் முடிந்த கையோடு ஸ்ராட் மியூசிக் அஜய் கிருஷ்ணா எடுத்த திடீர் முடிவு
- மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகை ரச்சிதாவின் கணவர்-அதுவும் எந்த டிவியில் தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!