நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் முடித்த கையோடு தனது கணவருக்கு போட்ட கண்டிஷன் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்து பட்டையை கிளப்பி வந்தார்.இந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பரும் பிஸ்னஸ் பார்ட்னருமான சோகெல் கதூரியாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் ஹன்சிகா.
சோகெல் ஈபிள் டவர் முன்பு ஹன்சிகாவிடம் ப்ரபோஸ் செய்யும் போட்டோக்கள் இணையத்தில் வெளியானது.அத்தோடு கடந்த வாரம் திருமணத்திற்கான சடங்குகள் ஆரம்பமாகிய நிலையில் நேற்று ஹன்சிகா மோத்வானிக்கும் சோகெல் கதூரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. ஜெய்ப்பூரிலுள்ள முண்டோடா அரண்மனையில் பிரமாண்டமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி விழா மற்றும் சங்கீத் ஆகிய நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஹன்சிகாவும் சோகெலும் இணைந்து நடனமாடினர். மேலும் நேற்று காலை நளங்கு நடைபெற்றது. இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது.எனினும் இதனை தொடர்ந்து நேற்று மாலை ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதூரியாவின் திருமணம் சிந்தி முறைப்படி நடைபெற்றது.
அத்தோடு திருமணத்தை முன்னிட்டு ஜெய்ப்பூர் முண்டோடா அரண்மணை பூக்களாலும் சீரில் லைட்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருமணத்தில் ஹன்சிகா சிவப்பு நிற லெஹெங்காவை அணிந்திருந்தார், சோகெல் கிரீம் கலர் ஷெர்வானி அணிந்திருந்தார். ஹன்சிகாவின் திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பெரும் வைரலானது.
இவ்வாறுஇருக்கையில் ஹன்சிகாவின் ஹனிமூன் பிளான் குறித்த தகவல்வெளியாகியுள்ளது. திருமணம் முடித்த கையோடு ஹனிமூனுக்கு நோ சொல்லியுள்ள ஹன்சிகா படப்பிடிப்புகளுக்கு எஸ் சொல்லி விட்டாராம். 6 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் விளம்பர பட ஷூட்டிங்கில் பங்கேற்கும் ஹன்சிகா, அடுத்தடுத்துள்ள கால் ஷீட்டுக்களை முடித்து விட்டுதான் ஹனி மூன் செல்ல உள்ளாராம். காதலையே ஈஃபிள் டவர் முன்பு சொன்ன சோகெல் ஹனிமுனுக்கு எங்கு அழைத்து செல்ல போகிறார் என எதிர்பார்த்துள்ளனர் ரசிகர்கள்.
Listen News!