தென்னிந்திய சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த குஷ்பு கடந்த 2000-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி-யை காதல் திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.
மேலும் இவர் அவ்னி சினிமேக்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். மீசைய முறுக்கு, அரண்மனை, நான் சிரித்தால் போன்ற வெற்றிப்படங்களை அந்நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார் குஷ்பு.தற்போது அரசியலில் பிசியாக உள்ள இவர் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் குஷ்பு ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. படத்தில் நீளத்தை கருத்தில் கொண்டு குஷ்புவின் காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக படக்குழு தரப்பு விளக்கமும் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நடிகை குஷ்பு, தனது இளைய மகள் அனந்திதாவின் 20-வது பிறந்தநாளை தனது கணவர் சுந்தர் சி உடன் சேர்ந்து கொண்டாடி உள்ளார். இதுகுறித்த அழகிய புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, அந்த பதிவில், “4 வாரத்திற்கு முன்பே பிறந்த உன்னை 4 மணிநேரம் கழித்து தான் என் கையில் கொடுத்தார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை, உன் கையை பிடிக்கும்போதெல்லாம் உன் அன்பையும், அரவணைப்பையும் என்னால் உணர முடிகிறது. உன் பெயரைப் போலவே எங்களுக்கு ஆனந்தத்தை அள்ளித்தந்தவள் நீ. எங்கள் சின்னவளுக்கு 20-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!