உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என இரட்டை கொண்டாட்டத்தில் இருக்கும் தமிழர்களுக்கு கோல்வுட் திரை நட்சத்திரங்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து 'டீசல்' படத்தில் நடித்து வருகிறார்.
படங்களில் பிஸியாக நடித்து வந்து கொண்டிருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் பெற்றோர்களால் தனக்கு நிச்சயிக்கப்பட்ட நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது குடும்பத்துடன் திருமணம் ஆகி முதல் தலைத்பொங்கலை கொண்டாடியுள்ளார்.அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவேற்றி உள்ளார்.அதற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகின்றது.
இதோ அந்த பதிவு....
Listen News!