• Sep 20 2024

ஐஸ்வர்யா ராஜின் மகள் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா?- உயர் நீதிமன்றில் அளிக்கப்பட்ட புகார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக கொடி கட்டிப் பறந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகியான இவரிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இதில் இவரின் நடிப்பானது பலரையும் கவர்ந்திருந்தது.

மணிரத்னம் இயக்கிய இப்படம் ஆனது மாபெரும் அளவில் வெற்றி பெற்றுள்ளது. கிட்டதட்ட ரூ. 450 கோடியை தாண்டி இப்படம் வசூல் செய்து உலகளவில் சாதனை படைத்தது. இப்படத்தில் மட்டுமன்றி நிஜத்திலும் ஐஸ்வர்யா ராய்யை 'இருவர்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் மணிரத்னம் தான்.


இந்நிலையில் ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அடுத்ததாக அவரின் மகளையும் மணிரத்னமே ஹீரோயினாக அறிமுகம் செய்து வைக்கப்போகிறார் என்பது குறித்து திரை வட்டாரத்தில் தற்போது பேச்சு ஒன்று எழுந்திருந்தது.ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஐஸ்வர்யா ஈடுபட்டு வருகின்றார்.


இந்த நிலையில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகளுமான ஆராத்யா பச்சன், தனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் பரவி வந்தது. இதனால் இது தொடர்பான வதந்திகளை  வெளியிட்ட யூடியூப் டேப்லாய்டுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..
















Advertisement

Advertisement