• Sep 21 2024

எவனாவது கொரோனா வரும் என்று சொல்லி இருக்கானா..? ஜோசியர்களை வெளுத்து வாங்கிய 'எதிர்நீச்சல்' குணசேகரன்... இரண்டு பட்ட 'தமிழா தமிழா' ஷோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு விவாத நிகழ்ச்சி தான் 'தமிழா தமிழா'. இந்த விவாதமானது வாராவாரம் வித்தியாசமான தலைப்புகளின் கீழ் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் இந்த வாரம் "ஜோதிடர் சொல்லும் பரிகாரங்களும் அதை கேள்வி எழுப்பும் பொதுமக்களும்" என்ற தலைப்பின் கீழ் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


இந்த ஷோவில் 'எதிர்நீச்சல்' சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவும் கலந்து கொண்டிருக்கிறார். அதில் குணசேகரனின் விவாதத் திறமையை பார்த்த ரசிகர்கள் விரைந்துள்ளனர். அதாவது அதில் ஜோதிடர்கள் சந்திராஷ்டமம் ஒன்று நம் புகைப்படத்தை செல்பி எடுத்து டெலிட் செய்து விட்டால் அன்றைய நாள் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தனர்.


இதனை கேட்டதும் கடுப்பான மாரிமுத்து "உங்களை எல்லாம் பார்த்து சிரிப்பு வருகிறது, கோபம் வரும் நேரத்தில் சிரிப்பும் கூடவே வருகிறது, இப்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதல்வரே ஆக முடியாது என்று பலர் கூறினர், ஆனால் அவர் முதல்வராகிவிட்டார், அதை போல் கொரோனா வரும் என்று எந்த ஜோசியனும் வர முதல் சொல்லவில்லை, சென்னையில் வெள்ளம் வரும் என்றும் எந்த ஜோசியனும் சொல்லவில்லை வந்த பிறகு சொல்லுவார்கள்" என்று ஜோசியர்களை மட்டம் தட்டிப் பேசினார். 


இதனால் கடுப்பான "ஜோசியர் நீங்கள் சொல்வது மட்டும் உண்மை என்றால் நான் 2 கோடி சொத்தை உங்கள் பெயருக்கு எழுதி தருகிறேன்" என்று கூறுகின்றார். மேலும் மாரிமுத்துவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஜோதிடர்கள் திணறுகின்றனர். இவ்வாறாக இந்த வார தமிழா தமிழா ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement