• Sep 20 2024

காவேரியை காதலித்த நிவின் யமுனாவை திருமணம் செய்து விட்டாரா?- மகாநதி சீரியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம்- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் மகாநதி.தந்தையை இழந்து நான்கு பெண் பிள்ளைகள் தாயுடன் தனியாக வாழும்போது என்னென்ன போராட்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சீரியலே மகாநதி.

இந்த சீரியலில் தற்பொழுது குமரன் தன்னுடைய மனைவி மற்றும் யமுனா, காவேரி நர்மதா, நிவின் எல்லோரையும் கூட்டிக் கொண்டு சென்னைக்கு ஹனிமூனுக்குச் சென்றுள்ளார்.


அங்கே நிவின் காவேரிக்கு தனது காதலை சொல்லியதால் காவேரியும் நிவினின் காதலை ஏற்றுக் கொண்டு விட்டார். இப்போது இருவரும் காதலித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க  யமுனாவும் நிவின் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

இப்படியான நிலையில் யமுனா கழுத்தில் தாலியுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் நிவினுக்கும் யமுனாவுக்கும் தான் திருணம் நடந்து விட்டதா? யமுனாவை யார் தான் திருணம் செய்துள்ளனர் எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement