• Sep 20 2024

திருமணத்திற்காக நாத்தனாருக்கு மட்டும் இத்தனை பவுன் நகைகளை அள்ளி கொடுத்துள்ளாரா நம்ம நயன்-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஏழு வருடங்கள் காதலை கடந்த நயன்-விக்கி தம்பதியினரின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.

இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்யும் இவர்கள் மகாபலிபுரத்திலுள்ள நட்ஷத்திர ஹோட்டலில் பெரிய செட் அமைத்து மிக பிரமாண்டமான அளவில் இந்து முறைப்படி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருமணத்தின் முழு பொறுப்பும் தனியார் நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட்டுள்ளது.அந்த நிறுவனமே விருந்தினர்கள் வருகை, விருந்தினர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் என அனைத்தையும் செய்துள்ளது.தனது திருமணத்திற்கான ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் நயன்தாரா. குறிப்பாக விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அசத்தல் பரிசுகளை கொடுத்துள்ளார்.

அந்தவகையில் தனது திருமண விழாவையொட்டி விக்கியின் சகோதரியும், தனது நாத்தனாருமான ஐஸ்வர்யாவுக்கு 30 பவுன் தங்க நகைகளை வாங்கி கொடுத்து பரிசளித்துள்ளார். மேலும் அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் தனித்தனியாக விலையுயர்ந்த பரிசு பொருட்களை வழங்கியுள்ளாராம். இதனை கொஞ்சமும் எதிர்பாக்காத விக்னேஷ் சிவனின் உறவினர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி வருகிறார்களாம்.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா தனது திருமணத்திற்காக காசை வாரியிறைத்துள்ளாராம். திருமணத்திற்கான செலவுகள் மட்டுமே பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement