கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது வணங்கான் படம் தான். இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பாலா.இப்படத்தை தயாரித்த சூர்யாவின் 2டி நிறுவனமும் இப்படத்தில் இருந்து முழுமையாக விலகி விட்டது.
அத்தோடு இப்படத்தில் சூர்யா விலகினாலும், எஞ்சியுள்ள யாரும் இப்படத்திலிருந்து விலகவில்லை என கூறப்படுகிறது. ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டியும், இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷும் தொடர்கிறார்கள் என்றும், சூர்யாவுக்கு பதில் அதர்வாவை நடிக்க வைக்க பாலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பானது கிட்டத்தட்ட கன்னியாகுமாரியில் ஒரு மாதமாக நடந்து வந்தது.ஷூட்டிங் நடந்த போதெல்லாம் அதில் பணியாற்றிய அனைவருக்கும் எந்தவித தாமதமும் இன்றி சம்பளத்தை வழங்கி வந்ததாம் சூர்யாவின் 2டி நிறுவனம்.
இந்நிலையில், வணங்கான் படத்துக்காக சூர்யாவின் 2டி நிறுவனம் செலவு செய்த தொகை எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக ரூ.10 கோடியை அந்நிறுவனம் செலவு செய்ததாம். தற்போது படத்தில் இருந்து சூர்யாவே விலகி விட்டதால் அந்த 10 கோடி ரூபாயும் வேஸ்டாக போனதாக கூறப்படுகிறது. பாலாவை நம்பி போட்ட பணம் இப்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தத்தில் சூர்யா இருக்கின்றாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!