ஹீரோ ,வில்லன் என பல வேடங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர் தான் பாபி சிம்ஹா.2012 இல் வெளியான காதலில் சுதப்புவது எப்படி என்ற படத்தில் அறிமுகமான இவர் அதன் பின்னர் பீஸா,சூது கவ்வும் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதன் பின்னர் ஜிகிர்தண்டா படத்தில் தனது வயதிற்குமீறிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு 2014 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இவர் நடிகை ரேஷ்மியை காதலித்து 2016ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு முத்ரா என்று மகள் 2017ல் பிறந்தார். எனினும் அதன் பின் 2019ல் பிறந்த மகனுக்கு அர்ஜுன் சிம்ஹா என பெயர் சூட்டினார்கள்.
இவ்வாறுஇருக்கையில் லேட்டஸ்ட்டாக தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நடிகர் பாபி சிம்ஹா எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், பாபி சிம்ஹா பிள்ளைகள் இவர்கள், நன்றாக வளர்ந்துவிட்டார்களே என்று கூறி வருகிறார்கள்.
Listen News!