அம்பிகா ஒரு திரைப்பட நடிகை. அவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவரது சகோதரி ராதாவும் சமகாலத்தில் திரைப்பட நடிகையாகத் திகழ்ந்தார்.
மேலும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லரா கிராமத்தில் ( கல்லாரா, திருவனந்தபுரம் ) குஞ்சன் நாயர் மற்றும் சரசம்மா ஆகியோருக்கு 1962 இல் அம்பிகா பிறந்தார் .
1979ம் ஆண்டு சக்களத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவந்த இவர் 1997ம் ஆண்டு முதல் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
மேலும் இவர் சன் தொலைக்காட்சியின் நாயகி தொடரில் நடிக்கும் அம்பிகா சில நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.
நடிகை அம்பிகாவிற்கு இரண்டு திருமணம் நடந்துள்ளது, ஆனால் இரண்டுமே விவாகரத்தில் தான் முடிந்திருக்கிறது. இவருக்கு ராம் கேசவ் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது நடிகை ராதிகா தனது மகன் ராம் கேசவுடன் எடுத்த புகைப்படம் இதோ....
Listen News!