தமிழ் சினிமாவில் 80களில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கெளதமி.இவர் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து பிரபல்யமானவர்.
அந்த வகையில் ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலமே கதாநாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் 1998-ல் திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு 1999-ல் ஒரு மகள் பிறந்தார்.இதனை அடுத்து கணவரைப் பிரிந்து வாழ்ந்ததோடு கமல்ஹாசனனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அவரையும் பிரிந்து தற்பொழுது மகளுடன் வாழ்ந்து வருகின்றார்.
இவருடைய மகள் சுப்புலக்ஷ்மிக்கு தற்பொழுது 23 வயது ஆகின்றது.விரைவில் இவர் சினிமாவில் நடிப்பார் என்று கூறப்படுகின்றது.இதற்கிடையே தற்போது அம்மா கெளதமியுடனான படங்களைப் பகிர்ந்து கார்த்திகை தீப வாழ்த்துகளை கூறியுள்ளார் சுப்புலக்ஷ்மி.இவரின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!