தமிழ் ,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகியது. இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது யசோதா ,சகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தி வருகின்றார். தனது காதல் கணவரை விவாகரத்துக்கு செய்ததன் பின் திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து புதிய படம் நடிக்கிறார். அப்படத்திற்கு குஷி என பெயரிட்டுள்ளனர், ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள்ள கூட சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது.
தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்துள்ள சமந்தா தனது வலிமையான பெண்ணாக மாற்றிக்கொள்ள எப்போதும் உடற்பயிற்சிகள் செய்த வண்ணம் இருப்பார். ஏணியில் எந்த ஒரு சப்போர்ட் இல்லாமல் அவர் மேலே ஏறிய வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலானது.
எனினும் சமீபத்தில் அன்னையர் தினம் வந்தது, மக்கள் அனைவருமே தங்களது அம்மாவை பற்றிய நிறைய விஷயங்கள் கூறியிருந்தனர். சமந்தாவின் ரசிகர்களின் பக்கங்களில் நடிகை தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படங்கள் நிறைய ஷேர் செய்துள்ளனர்.
அப்படி சமந்தா தனது அம்மாவுடன் எடுத்த இரண்டு கியூட் புகைப்படங்கள் இதோ,
Listen News!