ஹீரோ ,வில்லன் என பல வேடங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர் தான் பாபி சிம்ஹா.2012 இல் வெளியான காதலில் சுதப்புவது எப்படி என்ற படத்தில் அறிமுகமான இவர்.அதன் பின்னர் பீஸா,சூது கவ்வும் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதன் பின்னர் ஜிகிர்தண்டா படத்தில் தனது வயதிற்குமீறிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு 2014 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இவர் நடிகை ரேஷ்மியை காதலித்து 2016ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு முத்ரா என்று மகள் 2017ல் பிறந்தார். எனினும் அதன் பின் 2019ல் பிறந்த மகனுக்கு அர்ஜுன் சிம்ஹா என பெயர் சூட்டினார்கள்.
அத்தோடு பாபி சிம்ஹா அடுத்து ராவண கல்யாணம் என்ற படத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இதில் தெலுங்கு நடிகர் சந்தீப் மாதவ்வும் நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த படத்தின் பூஜையில் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி குழந்தைகள் உடன் கலந்துகொண்டனர். அதன் புகைப்படங்கள் ரசிகர்களிடத்தே வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதோ அந்த புகைப்படங்கள்...
Listen News!