• Sep 20 2024

தேவி ஸ்ரீ பிரசாத்தின் அம்மாவை பார்த்திருக்கின்றீர்களா...? அது இவங்க தானா..? எப்படி இருக்காங்க பாருங்க...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் ஏராளமான இசைப்பிரபலங்கள் தோன்றியிருப்பினும் அதில் ஒரு சிலரை மட்டும் நம்மால் என்றுமே மறக்க முடியாது. அந்த வரிசையில் தென்னிந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் இசையில் வெளிவந்த பல பாடல்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் விஜய்யுடன் இணைந்து தேவி ஸ்ரீ பிரசாத் 'திருப்பாச்சி, சச்சின்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருக்கின்றார். இதில் திருப்பாச்சி படத்தில் ஒரு சில பாடல்களுக்கு மட்டும் இசையமைத்த இவர், சச்சின் படத்திற்கு முழு இசையும் செய்து பல ரசிகர்களின் காதிற்கு விருந்து அளித்திருக்கின்றார்.

அத்தோடு காதல் மெல்லிசை, குத்துப் பாடல், உணர்ச்சிகரமான பாடல் என விதம் விதமாக இசைகளை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு தமிழில் திருப்புமுனைகள் கிடைக்கத் தொடங்கின.

அந்தவகையில் ஹரி இயக்கிய 'ஆறு' படத்தில் சூர்யாவுடன் தேவி ஸ்ரீ பிரசாத் இரண்டாவது முறையாக இணைந்து இசையமைத்து இருந்தார். விறுவிறுப்பான ஆக்ஷன் படமான இதனை தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இசையால் மேலும் சக்தி வாய்ந்ததாக மாற்றினார்.

அவரது பாடல்களும் பின்னணி இசைகளும் படத்தை  அதிக பார்வையாளர்களிடம் சென்றடைய உதவியமை குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் உடைய வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம் எனலாம்.

இவ்வாறாக பல ஹிட் படங்களிற்கும் இசையமைத்து வந்த இவர் சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.


இந்நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement