தமிழ் சினிமாவில் 160 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையும் தனக்கென ஓர் அடையாளத்தையும் உருவாக்கிய நடிகர் தான் ரஜினி. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் இவர் தற்பொழுது தனது 169வது படத்தில் நடித்து வருகின்றார்.
இவர் தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று நம்பப்படுகின்றது. இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து அண்மையில் விவாகரத்து பெற்றார்.இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். அதே போல சௌந்தர்யா கடந்த சில வருடங்களுக்கு முன் விஷாகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இரண்டு ஆண் மகன்கள் இருக்கின்றனர். மேலும் சௌந்தர்யா தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டாதி படத்தை இயக்கி இருக்கின்றார் என்பதும் முக்கியமாகும்.
இந்த நிலையில் அவரது முதல் மகன் ஐஸ்வர்யாவுடன் இருந்து விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளப்பக்கத்தில் பரவி வருவதைக் காணலாம்.
Listen News!