தமிழ் திரையுலகின் இசை கடவுளாக பார்க்கப்படும் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா.50 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய இனிமையான இசையால், பல ரசிகர்கள் நெஞ்சங்களை கட்டிப்போட்ட இளையாராஜா 1943 ஆம் ஆண்டு, ஜூன் 2 ஆம் தேதி, தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணையபுரத்தில் பிறந்தவர்.
இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, சிறந்த இசையமைப்பாளருக்காக 5 முறை தேசிய விருதை பெற்றவர் இவர் தற்போது விடுதலை படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் வருகிற 8ம் தேதி வெளியாகிறது.
இளையராஜாவிற்கு ஜீவா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கார்த்திராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இளையராஜாவின் மனைவி ஜீவா கடந்த 2011ம் ஆண்டு காலமானார்.
இந்நிலையில், இளையராஜா தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.அதுமட்டுமின்றி இளையராஜாவின் மனைவி ஜீவா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!