விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் வினோத் பாபு. அந்த நிகழ்ச்சி அவரை மக்கள் வந்து பிரபலமாக்கியது. அதையடுத்து ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்தார்.
அதில் சீரியலில் இல்லாத அரசியல் கதைகளம் இருந்தது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட தொடர் மற்றும் அதில், நடிக்கும் நடிகர், நடிகையரின் நேர்த்தியான நடிப்பினால் மிகவும் பிரபலமாகியது.வினோத் பாபு கலர்ஸ் தமிழில் ஒரு சீரியலிலும் நடித்துள்ளார். அதன்பிறகு, தனது மனைவி சிந்து உடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில், இவர்களது ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இவர்கள் அந்த போட்டியின் டைட்டில் வின்னராக வெற்றியையும் பெற்றனர். தற்போது தென்றல் வந்து என்னைத்தொடர் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார் வினோத் பாபு. இவர் அண்மையில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக வினோத் பாபு தெரிவித்திருந்தார்.
அத்தோடு சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் வினோத்பாபு தன்னுடைய குழந்தையை துாக்கி வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் வினோத்பாபு போல இருக்கிறாரே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!