தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்து இன்றுவரை பெயர் கூறும் அளவிற்கு புகழ் பெற்றவர் தான் நடிகர் சிவாஜி கணேசன்.மேலும் இவர் திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். மேலும் 'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள விடயம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அன்றில் இருந்து அந்த பெயரே நிலைத்தது. இவர் ஹீரோவை தாண்டி வில்லனாகவும் வெற்றிகண்டுள்ளார்.
ஆனால், இன்று வரை தன்னுடைய நடிப்பின் மூலம் ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் முடிவே இல்லா நடிகனாக வாழ்ந்து வருகிறார் சிவாஜி.
அத்தோடு நடிகர் சிவாஜி கணேசன் 1952ஆம் ஆண்டு கமலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். ராம்குமார், பிரபு, ஷாந்தி, தேன்மொழி சிவாஜியின் பிள்ளைகள் ஆவார்கள்.
இவ்வாறுஇருக்கையில், நடிகர் சிவாஜி கணேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்...
Listen News!