தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்துள்ளனர். அவர்கள் வரிசையில் மிக முக்கியமான நடிகை தான் சினேகா.இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு புன்னகை அரசி என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றார்.
நடிகை சினேகா கடந்த 2012 ம் ஆண்டு நடிகர் பிரசன்னா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தோடு இவர்கள் இருவருக்கும் விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்னும் பெண் குழந்தையும் உள்ளது.
திருமணத்திற்கு பிறகு நடிப்பை தொடர்ந்த சினேகா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். பிரசன்னாவும் துப்பறிவாளன் 2 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது நடிகை சினேகா தனது அக்காவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த பலரும், இருவரும் ஒரே மாதிரி இருக்காங்களே என்று கூறி வருகின்றன.
இதோ அந்த புகைப்படம்..
Listen News!