• Sep 21 2024

சூர்யா மற்றும் கார்த்தியின் பூர்வீக வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா? - அட இவ்வளவு அழகாக பராமரிக்கின்றார்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக விளங்குபவர்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களாக விளங்குகின்றனர். கதாநாயகனாக மட்டுமல்லாது நெக்கடிவ் ரோலிலும் இவர்கள் நடித்து வருகின்றனர்.

இவர்களின் தந்தையான சிவகுமாரும் நடிகர் ஆவார். இவர் 1965ம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் மொத்தமாக இதுவரை 190 படங்கள் வரை நடித்திருக்கிறார்.

படங்களை தாண்டி சின்னத்திரையிலும் முக்கியமான சீரியல்கள் நடித்துள்ள இவர் சிறந்த ஓவியராகவும் விளங்குகின்றார். அவர் அறிமுகமாகி கலக்கிய அதே சினிமாவில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் கலக்கி வருகின்றனர்.

சிவகுமார் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் தான் பிறந்த வளர்ந்த தனது வீட்டை மிகவும் அழகாக பாதுகாத்து வருகிறார். தனது வீட்டை மட்டும் இல்லாமல் அங்கிருக்கும் கோயில்களுக்கு நன்கொடை கொடுப்பது, பள்ளிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வது, பல குழந்தைகள் படிக்க உதவுவது என நல்ல விஷயங்களையும் சொந்த ஊரில் செய்து கொண்டிருக்கிறார்.

தற்போது சிவகுமார் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் அழகாக பார்த்துக் கொண்டிருக்கும் அவரது வீட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

  1. காளி போஸ்டருக்கு எதிராக கனடாவில் தொடங்கிய கண்டனம்- தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இயக்குநர் லீனா

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement