• Sep 21 2024

சரிகமப நிகழ்ச்சியின் நடுவர் அபிராமியின் மகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபு நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் மாதவன் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் அபிராமி. கேரளாவைச் சேர்ந்த இவர் முதலில் மலையாளத்தில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்திரங்களில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து தோஸ்த், சமுத்திரம்  சார்லி சாப்ளின்,சமஸ்தானம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். 


மேலும் இவருக்கு பெரியதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது கமல்ஹாசனுடன் நடித்த விருமாண்டி திரைப்படம் தான்.இத்திரைப்படத்தில் திமிரான கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.தொடர்ந்து சினிமாவை விட்டு விலகிய இவர் நீண்ட இடைவெளியின் பின்னர் மாறா என்னும் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.


அதைத் தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் வெப் சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு ஷு தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகின்றார்.


இந்த நிலையில் 13 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நடிகை அபிராமி பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய குழந்தை மற்றும் கணவரோடு ஓணம் பண்டிகையை கொண்டாடி அபிராமி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement