தமிழ் சினிமாவில் சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக விளங்குபவர் தான் சுந்தர்ராஜன். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இவர் தற்பொழுது விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை என்னும் சீரியலில் அண்ணாமலை என்றும் காரெக்டரில் நடித்து வருகின்றார்.
இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் துர்கா என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.இந்த தம்பதிக்கு கார்த்திக், தீபன், அசோக் ஆகிய மூன்று மகன்கள் பிறந்து இருக்கின்றனர். அதில் 2004 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் கார்த்திக் இறந்துவிட்டார்.
இன்னொரு மகன் அசோக் அவர் இயக்கிய சித்திரையில் நிலாச்சோறு என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சுந்தர்ராஜன் தனது மகன்கள் மற்றும் மனைவி, மருமகள் என எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!