தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் தமது இயல்பான நடிப்பினாலும் நளினத்தாலும் தமக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தான் பத்மினி.
சிறப்பாக நடனம் ஆடக்கூடிய இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் ரஷ்ய மொழிகளிலும் நடித்திருக்கின்றார்.நடிகை பத்மினி 1961ம் ஆண்டு ராமசந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகி குடும்பத்தில் அக்கறை காட்டி வந்தார்.
வெளிநாட்டிலேயே செட்டில் ஆன பத்மினிக்கு பிரேம் ஆனந்த் என்ற மகன் இருக்கிறார், இப்போது அவர் வெளிநாட்டில் பத்மினி பெயரில் உள்ள நடன பள்ளியை கவனித்து வருகிறாராம்.ஒரு மலையாள மொழி படத்தில் கூட பிரேம் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பத்மினி தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஆடிய மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன பாடல் தற்பொழுதும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருவதைக் காணலாம்
Listen News!