தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக கொண்டாடப்படும் நடிகர் தான் விஜய்.இவர் தொடக்கத்தில் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் என்று கூற வேண்டும்.
இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் தற்போது வசூலில் அள்ளிக்குவித்து விடும். ஆனாலும் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் தான் கொஞ்சம் சரியாக ஓடவில்லை.
காரணம் சரியான கதைக்களம் இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது, விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி கூட பெரிய நடிகர்களின் படங்கள் கிடைத்துவிட்டால் எப்படி வேண்டுமானாலும் இயக்கலாம் படம் ஓடிவிடும் என்ற எண்ணம் இயக்குநர்களுக்கு உள்ளது, கதையில் கவனம் செலுத்துவது இல்லை என பேசியிருந்தார்.
எனினும் தற்போது விஜய் ரசிகர்கள் அனைவருமே தளபதி 66 படத்திற்காக தான் காத்திருக்கிறார்கள்.
இவ்வாறுஇருக்கையில் தற்போது சமூக வலைதளத்தில் இயக்குநரும், விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் சொந்த ஊரில் வாழ்ந்த வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம், காமன்கோட்டை கிராமம் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் சொந்த ஊர் என குறிப்பிடப்படுகின்றது.அதில் விஜய் வசித்தாரா இல்லையா என்ற விவரங்கள் தெரியவில்லை.
பிற செய்திகள்
- கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு ரியஷல் பாக்கலாமா?-கலக்கலாய் நடந்த ஒத்திகை நிகழ்ச்சி
- படம் வெளியாவதற்கு முன்னரே விருமன் படத்தின் ‘கஞ்சா பூவு கண்னால’பாடல் செய்த சாதனை
- கையில் Glass உடன் தெறிக்க விடும் நடிகை ஆண்ரியா-தீயாப்பரவி வரும் போட்டோஸ்
- பல லட்சம் பெறுமதி மிக்க வாட்சை சூர்யாவுக்கு பரிசளித்த கமல்-செம சர்ப்ரைஸ் கிப்ட் தான்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!