ஸ்டான்ட்லி மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வருபவர் தான் ஸ்டண்ட் சில்வா.பார்க்க கரடு முரடான கோவக்காரர் போல் இருக்கும் இவர் நிஜத்தில் மிகவும் அமைதியான கேரக்டராம். அத்தோடு இவர் ஒரு தனிமை விரும்பியாம். இதனால் ல இடங்களில் அதிகமாக தனியாகத் தான் இருப்பாராம்.
தூத்துக்குடியை சொந்த ஊராகக் கொண்ட இவருக்கு ஸ்கூல் படிக்கும்போது டாக்டராக வேண்டும் என்று ரொம்பவே ஆசையாம். ஆனால் பத்தாம் வகுப்பை தாண்ட முடியவில்லையாம். படிப்பு ஏறாததால் படிப்பை பத்தாம் வகுப்போடு நிறுத்தி விட்டு அதற்குப் பிறகு டிப்ளமோ கோர்ஸ் படித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் டான்ஸ் மூலமாக சினிமாவில் அறிமுகமாகலாம் என்று இருந்தாராம். ஆனால் அதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லையாம். இதனால் சண்டை காட்சிகளில் நடிப்பதைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தாராம்.
இப்போது இவர் ஸ்டண்ட் அமைக்காதல் சண்டையிட்ட நடிகர்களே இல்லை என்று கூறலாம், முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பணிபுரிந்திருக்கிறார்.மங்கையர்க்கரசி என்பவரை திருமணம் செய்துகொண்ட சில்வாவிற்கு ஒரு அம்ரிதா ஹர்ஷினி என்ற மகளும் கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளார்கள். இவர் குடும்பத்துடன் நிற்கும் புகைப்படம் தான் தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!