• Sep 20 2024

நாங்க பெத்த குழந்தைய அவனே அடிக்க வந்தான்!- இதுக்கு அந்த பொண்ணு தான் காரணம்- திவ்யா ஸ்ரீதர் அளித்த பரபரப்பான பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!


செவ்வந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர்.இவர் நடிகர் அர்னவ் என்பவரை 6 வருடங்களாகக் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமான நடிகை திவ்யா, அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறி மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து கைதான அர்னவ் பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அர்னவ் 2 பெண்களை ஏமாற்றியதாக கூறி, அதுகுறித்த ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இச்சம்பவத்தை அடுத்து நடிகர் அர்னவ் அடி ஆட்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்து தன்னுடைய வீட்டில் தகராறு செய்ததாகவும்  திவ்யா ஸ்ரீதர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.


இந்த நிலையில் இவர் தற்பொழுது ஓர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது அர்னவ் காதலித்த 6 வருடங்களிலும் சரியாகத் தான் இருந்தார். அந்த டைம்ல அவர் தன்னுடைய ஒரிஜினல் முகத்தை காட்டியது இல்லை.கல்யாணம் பண்ணினகு்கு பிறகு தான் அவனோட செயலே மொத்தமாக மாறிச்சு. செல்லம்மா சீரியலில் அன்சிதாவால் தான் இப்படி மாறினான் என்றும் தெரிவித்தார்.


அத்தோடு ஒரு நாள் அன்சிதா கோஃல் பேசிட்டு இருக்கிறா, அப்போது அவ உன்னோட குழந்தையால தான் அவனோட லைப் வேஸ்டா போயிட்டு இருக்குஇ எல்லாத்துக்குமேஇ ந்த குழந்தை தான் காரணம் என்று சொன்னா. அர்னவ்வும் இந்த குழந்தை இருப்பதால் தானே நீ இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க என்று ஓங்கி அடிச்சான் நான் திரும்பிட்டேன். வயித்தின் சைட்ல தான் அடி பட்டிச்சு. அதுக்கு முதலே எனக்கு அடிப்பான் அப்போ எனக்கு பெருஷா தெரில, ஆனால் குழந்தையை அழிக்கனும் என்று நினைத்தது தான் ரொம்ப தப்பு என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement