சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல் தொடர். இந்த சீரியலின் தூணாக இருந்து வந்தவர் தான் நடிகர் மாரிமுத்து.தற்போது 57 வயதான மாரிமுத்து இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சரத்குமார்,சூரி, ரவிமவுரியா, ரமேஷ் பிரபா, எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் பேரசு, இயக்குநர் பாண்டிய ராஜன் மற்றும் எதிர் நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு கதறி அழுதனர்.
இந்நிலையில், மாரிமுத்து வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் பவானி அளித்துள்ள பேட்டியில், ஒரு நல்ல மனுஷனுக்கு இப்படியா நடக்கணும் என்று கதறி அழுதார். வீட்டில் அவர் இருந்தால் கலகலப்பாக பேசுவார், பொறுப்பா வேலை பாருனு எப்போதுமே சொல்லுவார். அதே போல, என் மகளின் திருமணத்திற்கு பணம்கொடுத்து உதவி செய்தார்.
அவருக்கு ஏற்கனவே ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்து இருக்கு, அப்போது அவருக்கு சூர்யா மருத்துவமனையில் தான் ட்ரீட்மெண்ட் பார்த்தாங்க. அவர் படப்பிடிப்புக்காக ஊருக்கு போய் இருந்தாரு, 20 நாளாக வீட்டுக்கே வரல, நேத்துத்தான் வீட்டுக்கு வந்தாரு. காலையில் வேலை இருக்குனு கிளம்பிடிட்டாரு, காலையிலேயே அவருக்கு வலி இருந்து இருக்கு ஆனால், சொல்லாமல் விட்டுவிட்டார்.
சினிமாவில் தான் அவர் வில்லன்போல இருப்பார். ஆனால், நிஜத்தில் அவர் ஒரு ஹீரோ தான். அவரது மரணசெய்தி கேட்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டேன் என்று பணிப்பெண் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இவரின் பேட்டி தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!