• Sep 20 2024

எனது ஹேண்ட் பேக்கை பறித்து விட்டு வீட்டுக்கு வந்து வாங்குமாறு அழைத்தார்; வில்லன் நடிகரின் கொலைமுயற்சியால் சென்னையை விட்டு ஓடிய அண்ணாத்த பட நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள படங்களில் நடித்து வந்தவர் தான் அஞ்சலி நாயர். இவர் தமிழிலும் நெல்லு, உன்னையே காதலிப்பேன், ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதி உடன் மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு அனீஷ் என்கிற இயக்குநரை திருமணம் செய்தார்.


இருப்பினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமா இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.திருமணமான ஐந்தே மாதங்களில்  இந்த தம்பதிக்கு குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் நடிகை அஞ்சலி நாயர் யூடியூப் சேனல் மூலம் சினிமாவில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து மனம்விட்டு பேசி வருகிறார். அந்தவகையில் சமீபத்திய வீடியோ ஒன்றில், தமிழ் படத்தில் நடித்தபோது வில்லன் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற பகீர் தகவலை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


அதில் அவர் கூறியதாவது : “கேரளாவை சேர்ந்தவளாக இருந்தாலும் எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும். பூர்வீகம் தமிழ்நாடா என கேட்கும் அளவும் சரளமாக தமிழ் பேசுவேன். இதனால் தமிழ் மொழியில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என நான் விரும்பினேன். நான் தமிழில் முதன்முதலில் நடித்தபோது, வில்லன் நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் அப்படத்தில் வில்லன் மட்டுமல்ல இணை தயாரிப்பாளராகவும் இருந்தார்.


ஷூட்டிங் இல்லாத சமயத்திலும் என்னை வெளியே செல்ல அனுமதிக்காமல் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார். என்னிடம் ப்ரபோஸ் செய்ததோடு, நான் எங்கு போனாலும் பின் தொடர்ந்து வந்தார். ஒருமுறை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்தார். இதுதவிர எனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு சென்ற அவர், தனது வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு அழைத்தார். இப்படி அவர் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் காவல்துறையின் உதவியை நாடினேன். இதையடுத்து கேரளாவுக்கே சென்றுவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.இந்த தகவலால் யார் அந்த நடிகராக இருக்கும் என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement