• Sep 20 2024

இயக்குநர் சுந்தர்.சி போட்ட அதிரடித் திட்டம்- அரண்மனை திரைப்படத்தின் 4 பாகமும் எடுக்கப் போகின்றாராம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

காமெடியை இணைத்து குடும்பங்கள் கொண்டாடும் மசாலா படங்களாக எடுப்பவர் தான் சுந்தர்.சி. நடிகராகவும் வலம் வரும் இவரது இயக்கத்தில் வெளியாகிய பேய்ப்படம் தன் அரண்மனை . இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமுமு் வெளியானது.அதன்பின்பு மூன்றாவது பாகமும் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படங்களில் ஹன்சிகா, திரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், சந்தானம் உள்ளிட்ட நடிகைகள் நடிகர்கள் நடித்திருக்கின்றனர்

மூன்றாவது பாகத்தில் நடிகர் ஆர்யா நடித்திருந்தார். நகைச்சுவைக்கு என்று யோகி பாபு, மனோபாலா, சந்தானம், சித்ரா லட்சுமணன், கோவை சரளா உள்ளிட்டோர் இந்த படங்களில் நடித்திருக்கின்றனர்.

அரண்மனையை மையமாக வைத்து உலாவும் பேய், அரண்மனையில் இருக்கும் முக்கிய கதாபாத்திரத்தின் உடலில் புகுந்து விட, அந்த பேயின் தீராத ஆசையை கண்டுபிடிக்கும் சுந்தர்.சி ஒவ்வொரு பார்ட் திரைப்படத்திலும் ஒவ்வொரு உத்தியை செய்து கடவுள், சமய சடங்குகள், கிரக நிலைகள் மற்றும் ரிஷிகளின் துணையோடு பேயை வெளியேற்றுவார்.

இதற்கான கதைக்களம் ஒவ்வொரு பார்ட்டிலும் மாறினாலும் அனைத்துமே அரண்மனை என்கிற ஒரு புள்ளியில் இணைகிற கதைகளாக இருக்கும். மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்த தொடர் வரிசை திரைப்படத்தின் அடுத்த பாகம் குறித்த தகவல் தான் தற்போது தெரிய வந்திருக்கிறது.

அதாவது இத்திரைப்படத்தின் நான்காவது பாகம் வெளிவர உள்ளதாக நம்பர் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. இந்த திரைப்படத்தின் மற்ற நடிகர், நடிகர்கள் குறித்த விபரம் விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement