பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய விஜே மகேஸ்வரி தன்னுடைய க்ரஷ் பற்றி மனம் திறந்துள்ளார்.
சன் மியூசிக் சேனல் தொடங்கிய போதே தொகுப்பாளராக அறிமுகமானவர் விஜே மகேஸ்வரி. இவர் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியாவில் விஜேவாக இருந்து இருக்கிறார்.மேலும் இவர் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளராக வீட்டிற்குள் வந்த மகேஸ்வரி யாருக்கும் பயப்படாமல் வீட்டில் துணிந்து தனது கருத்தை கூறிவருந்தார். அதே போல டாஸ்க்கையும் சிறப்பாக விளையாட்டு வந்த மகேஸ்வரி கடந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியேறினார். மேலும் இந்த சீசன் 6 நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளராக இவர் இருப்பார் என்று நினைத்த நினையில் இவர் வெளியேறியது ரசிகர்களை சற்று சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மகேஸ்வரி அளித்துள்ள பேட்டியில் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதில், பிக் பாஸ் வீட்டில் அசல் கோலார் பெண்களிடம் நடந்து கொண்டவிதம் பற்றி வீட்டில் இருக்கும் போது எங்களுக்கு எதுவும் தெரியவில்லை இயல்பாக பேசுவது போலத்தான் தெரிந்தது. ஆனால், அவர் நிவாஷினிடம் நடந்து கொண்டவிதம் வெளியில் வந்து பார்க்கும் போது அது தப்பாகவே உள்ளது என்றார்.
அத்தோடு ,பிக்பாஸ் வீட்டுக்கு நான் போனதுமே எனக்கு விஜே கதிரவன் மேலத்தான் க்ரஷ் இருந்துச்சு, அமைதியாக அப்படியே க்யூட்டா இருக்கும் பையனை யாருக்குத்தான் பிடிக்காது. அத்தோடு கதிர் அனைவரிடமும் அன்பாக பேசுவார், கொஞ்சம் சோர்ந்து உக்காந்தால் நமக்கு ஆறுதல் கூறுவார். இதனால், தீபாவளி என்னைக்கு அவரை ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன். இதை இத்துடன் நிறுத்திவிடுங்கள் ஆனால், இன்னமும் அவர் மீது எனக்கு க்ரஷ் இருக்கு என்றார்.
அதே போல, ராமிடம் நான் பேசிய வீடியோவை, பார்த்தேன் அவர் அனைவரிடத்திலும் அப்படித்தான் பேசுவார் என்பதால் தான் என்கிட்ட மட்டும் தான் இப்படி பேசுவியா? என்று கேட்டேன் மற்றபடி எனக்கு விஜே கதிரைத்தான் பிடிக்கும் என்றார். அத்தோடு தனலட்சுமி மிகவும் நல்ல விளையாடுறாங்க ஆனால், அவர் கோபத்தை குறைத்துக்கொண்டு கவனமாக விளையாட வேண்டும் என்றார்.
Listen News!