விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்த சீரியலில் மிகப்பெரிய தூணாக விளங்கி வருபவர் கோபி தான். இவர் இன்னும் 10, 15 எபிசோடுகள் முடிந்தவுடன் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து வீடியோ வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தனது வெளியேற்றத்தில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து இந்த சீரியலில் இவருக்கு பதிலாக அப்பாஸ் நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் பப்லு என்று அழைக்கப்படும் பிரித்திவிராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
திரைப்படங்கள், சீரியல் என இரண்டிலும் கலக்கி வந்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான 'கண்ணான கண்ணே' சீரியலில் கௌதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இவரின் வரவை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.
Listen News!