• Sep 20 2024

அவரு மட்டும் தான் என்னை பெயர் சொல்லி அழைப்பாரு- மகன் குறித்து ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தங்களது திறமையால் ஜொலிக்க விரும்பும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.ஒருவரின் ஆதரவும் இல்லாமல் சின்னத்திரையில் நுழைந்து காமெடி நிகழ்ச்சி, பின் தொகுப்பாளர், நடன கலைஞர் என பன்முகம் காட்டி வெள்ளித்திரைக்கு வந்தவர்.

இப்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக இவரது படங்கள் வசூல் சாதனை செய்து வருகின்றன.கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் சரியான விமர்சனம் மற்றும் வசூலை பெறவில்லை. அடுத்ததாக இன்றைய தினம் இவரது நடிப்பில் மாவீரன் என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றது.


மேலும் இவருக்கு கடந்த ஆண்டு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.அண்மையில் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து குடும்பமாக நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இப்படியான நிலையில் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார்.

அதில் நான் காஷ்மீர் ஷுட்டிங் போகும் போது குடும்பத்தையும் சேர்த்து தான் கூட்டிட்டு போனேன். ஷுட்டிங் இல்லாத டைம்ல குடும்பத்தோட தான் செலவு பண்ணுவேன்.மகன் குகன் தான் என்னை சிவகார்த்திகேயன் என்று சொல்வாரு.குழந்தைகளோட இருக்கிறதே தனி சந்தோஷம் தான் எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement