விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 6 சீசன் ஒளிப்பரப்பாகி வருகின்றது.பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து,ஷெரினா,அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், என 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அசீம் , விக்ரமன், ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, ராம் இமகேஸ்வரி ஆகியோர் இடம்பெற்றனர்.
தற்போது அசீம் அதிகமாக வாக்குகள் பெற்று முதல் ஆளாக காப்பாற்றப்பட்டார். அவரை அடுத்து விக்ரமன்இ ஏடிகேஇ ஆயிஷாஇ தனலட்சுமிஇ ராம் ஆகியோர் கடந்த வார எவிக்ஷனில் இருந்து ஆகியோர் இறுதியில் குறைந்த வாக்குகளை பெற்ற மகேஸ்வரி வெளியேற்றப்பட்டார்.
மேலும் இவர் வெளியேறுவார் என மக்கள் யாருமே எதிர்ப்பார்க்கவில்லை, ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றார் என வெளியேறிவிட்டார்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பிறகு மகேஷ்வரி பேட்டிகள் கொடுத்துள்ளார். அப்படி ஒரு பேட்டியில், விக்ரமன் கண்டிப்பாக நூறு சதவீதம் இறுதி வரை வருவார் என கூறிஉள்ளார்.
மேலும் தனா மற்றும் அசீம் இல்லாத ஒன்று விக்ரமிடம் இருக்கிறது என்றால் அது சரியான நிலைப்பாடு தான். விக்ரமன் கண்டிப்பாக பலமான போட்டியாளர் என கூறியுள்ளார்.
Listen News!