• Sep 19 2024

அவர் என்னை ஒரு தலையாகத் தான் காலித்தார்- தனது காதல் திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசிய சரண்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்பொழுது அம்மா கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் தான் சரண்யா பொன்வண்ணன். இவர் தமிழில் விஜய்யைத் தவிர அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து விட்டார் எனலாம்.

மேலும் ஒவ்வொரு படங்களிலும் சென்டிமென்டாக மட்டுமல்லாது காமெடியாகவும் நடித்து அசத்துபவர். அதிலும் இவர் பரத் நடிப்பில் வெளியான எம்டன் மகன் படத்தில் செய்த காமெடிகள் எல்லாம் இன்றும ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருவதைக் காணலாம்.


இவர் பிரபல நடிகரான பொன்வண்ணனைத் திருமணம் செய்திருப்பதோடு இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளர். இந்த நிலையில் இவரது திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது சரண்யாவை ஒருதலையாக பொன்வண்ணன் காதலித்து வந்திருக்கிறார்.ஆனால் அவரிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் கூட சிரித்து பேசியது கிடையாதாம். "திடீரென ஒரு நாள் போன் செய்து 'நான் ஒரு படம் எடுக்கிறேன், உங்கள் dates வேண்டும்' என கேட்டார். 

எத்தனை நாள் என கேட்டதற்கு 70 வருஷம் என கூறினார். யோசித்து சொல்கிறேன் என கூறி, அதன்பின் இவர் காமெடிக்கு பேசுகிறார் என விட்டுவிட்டேன்.""அதன் பின் 10 நாட்கள் கழித்து மீண்டும் போன் செய்து கேட்டார். அதன் பின் தான் அவர் சீரியஸாக பேசுகிறார் என புரிந்தது. அதன் பின் அவரை பற்றி விசாரிக்க தொடங்கினேன். பாரதிராஜா சார் தான் அவரை பற்றி உயர்வாக கூறினார்" என சரண்யா கூறி இருக்கிறார்.

அதன் பின் இரு குடும்பத்தினரும் பேசி திருமணம் நடைபெற்று இருக்கிறது.இது குறித்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement