• Sep 20 2024

என்னைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டு கொண்டார்- விஜயகாந்த் குறித்து மகிழ்ந்த கார்த்தி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருக்கின்றன.

இது தவிர மக்களுக்கு சேவையாற்றுவதற்காக ஒரு கட்டத்தில் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.இருப்பினும் சமீபகாலமாக இவர் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். இதனால் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதோடு அடிக்கடி சிகிச்சை பெற்றும் வருகின்றார்.


இந்த நிலையில் இவர் தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.இவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

அதேபோல்  பல திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அவர் என்னை பார்த்தவுடன் எனது கையை பற்றிக் கொண்டார் என்றும் எளிதில் அடையாளம் கண்டு கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் நடிகர் சங்கம் அவருக்கு கடமைப் பட்டுள்ளது என்றும் அதனால்தான் அவரை சந்திக்க வந்துள்ளேன் என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி மட்டுமின்றி மேலும் சில நடிகர்களும் விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement