தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களை மக்களால் மறக்கவே முடியாது. அப்படி மறைந்தாலும் ரசிகர்களால் மறக்கப்படாத நடிகர் தான் ரகுவரன்.எத்தனை வில்லன்கள் வந்தாலும் இவரை மட்டும் மக்களால் மறக்க முடியாது, இப்போதும் இவர் இருந்திருந்தால் செம வெயிட்டான வில்லனாக வலம் வந்துகொண்டிருப்பார், அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ரகுவரன் நடிகை ரோஹினியை 1996ம் ஆண்டு திருமணம் செய்து 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார், அவரின் பெயர் சாய் ரிஷிவரன். இவர் திருமணமாகி சில வரடங்களிலேயே மனைவியைப் பிரிந்ததோடு தனிமையில் வாழ்ந்து வந்தார். மேலும் மாரடைப்பு காரணமாகவே இறப்புக்குள்ளானார்.
இந்த நிலையில் இவரின் தம்பி முதன்முறையாக பேட்டியளித்துள்ளார். அதில் அண்ணன் எதற்காக குடித்தார் என்று எங்களுக்கு தெரியாது. அப்படி குடிக்க பழகிவிட்டார். பிறகு ஒரு கட்டத்தில் அவர் எப்போதும் தனிமையே விரும்பத் தொடங்கி இருந்தார். அந்த நிலை நேரத்தில் அவருடைய சொந்த வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தது.
தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் தான் கடைசியா நடிச்சாரு. இப்படத்தில் தனுஷ் நடிக்க கேட்கும் போது என் பையன் மாதிரி தான் இருக்கிற கண்டிப்பா நடிக்கிறேன் என்று சொல்லி நடிச்சாரு.அந்த படத்தின் சூட்டிங் முடிந்து பிறகு அண்ணனுக்கு உடல்நிலை ரொம்பவே முடியாமல் போய் விட்டது. இதனால் தான் அவர் இறப்புக்குள்ளானாரு என்றும் கூறினார்.
Listen News!