ஷு தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்னும் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் ஸ்ரீநிதி . இந்த சீரியலைத் தொடர்ந்து சில சீரியல்களில் நடித்திருந்தாலும் வலிமை திரைப்படத்தைப் பற்றி தவறாகப் பேசி ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.
இதனால் மன உழைச்சலுக்குள்ளான ஸ்ரீநிதி சில நாட்களுக்கு முதல் பிரபல சேனல் ஒன்றில் தான் சரியாகி விட்டதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அண்மையில் நடிகர் சிம்புவைக் காதலிப்பதாக கூறி போராட்டத்தில் இறங்கினார். அத்தோடு இவரின் நெருங்கிய தோழியான நட்சத்திரா தவறான ஒருவரைக் காதலிப்பதாகவும் கூறினார்.
இவ்வாறு மாறி மாறி பல சர்ச்சைகளில் சிக்கி வந்ததால் இவருடைய தொலைபேசி பறிக்கப்பட்டதாகவும் மன அழுத்தத்திலேயே இவர் இப்படி எல்லாம் நடந்து கொள்கின்றார் என்றும் இவரது அம்மா அண்மையில் பிரபல சேனல் ஒன்றுடன் பேசியிருந்தார்.
அந்த வகையில் இவர் தற்பொழுது கூறிய விடயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது ஒரு ஷோ பற்றி பேச வேண்டும் என சொல்லி ஆபிசுக்கு வர சொன்னார்கள். ஆனால் அது பார்ப்பதற்கு வீடு போல இருந்தது. அதன் உள்ளே ஆபிஸ் செட்டப் வைத்திருந்தார்கள்.
அப்போது அந்த நபர் என்னிடம் தவறாக அணுகினார். அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை. என்னை அவரது மடியில் அமர சொன்னார். நானும் பயத்தில் அமர்ந்தேன்.
கீழே என் பிரென்ட் வெயிட் பன்னிட்டு இருக்கார், போகணும் என சொல்லி அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். அப்படி பொய் சொல்லி தான் தப்பித்தேன் என ஸ்ரீநிதி தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- ‘மற்ற நடிகர்களுக்கு அட்வைஸ்ட் பண்ண நாங்க யாருங்க அவங்களுக்கே தெரியும்’- இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
- “என்னை ஏன் விக்ரம் படத்திற்கு கொண்டு வந்தீங்க..? ” ஜாபர் சாதிக் கேட்ட கேள்விக்கு நச்சு என பதில் கூறிய லோகேஷ்..!
- இப்படி இறங்கிட்டிடாங்களே இந்த தமிழ் நடிகை: அழகை வைத்து பேரம்; ஒருநாளைக்கு ஒன்றரை லட்ஷமாம்!
- நயனின் திருமணத்திற்கு நம்ம சூப்பர் ஸ்ரார் என்ன பரிசளித்துள்ளார் தெரியுமா..? சொக்கிப்போன தம்பதிகள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!