• Sep 21 2024

என்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார்- நடிகை ராக்கி சாவந்த் பற்றிய உண்மைகளை உடைத்த இரண்டாவது கணவர்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி,தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் ராக்கி சாவந்த்,இவர் மராத்தி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல்யமானவர். இவர் தன்னை விட 11 வயது குறைந்த ஆதில் கானை திருமணம் செய்து கொண்டார். பின் சில மாதங்களிலேயே,ஆதில் கானை விட்டுப் பிரிந்தார்.

மேலும் ஆதில் கான் தன்னுடைய வங்கியில் இருந்த பணத்தை தனக்கு தெரியாமல் எடுத்து செலவு செய்துவிட்டதாகவும், என்னுடைய நிர்வாண வீடியோவை பணத்திற்காக விற்றுவிட்டதாகவும் அடுக்கடுக்கான புகார்களை அளித்திருந்தார். இதனால் ஆதில்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஐந்து மாதங்களின் பின் விடுதலை செய்யப்பட்டார்.


விடுதலையான ஆதில்கான் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது 2021ம் ஆண்டு என் நண்பர் மூலமாக ராக்கி சாவந்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது, தனது கணவர் ரித்தேஷை பிடிக்கவில்லை என்று கூறி என்னுடன் நெருங்கி பழகினார். இதையடுத்து,2022ம் ஆண்டு மே மாதம், இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டோம்.

என்னை திருமணம் செய்து கொண்ட பிறகும், ராக்கி என்னை ஏமாற்றிவிட்டு முதல் கணவருடன் தொடர்பில் இருந்தது எனக்கு தெரியவந்தது. இதனால், நான் விவாகரத்து கேட்டேன், அவரும், விவாகரத்து கொடுக்க சம்மதித்தார். மேலும், அவரைப் பற்றியும் ரித்தேஷ் பற்றியும் என்னிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் அவரிடம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் என்னை வீட்டுக்கு அழைத்து, ஆனால், வீட்டுக்கு போலீசை வரவழைத்து பொய்யான புகார்களை கூறி என்னை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்.


உண்மையில், அவரை நான் தாக்கவில்லை, அவர் என்னை பல முறை தாக்கி உள்ளார். மேலும், எனக்கு போதை மருந்தை கொடுத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துள்ளார். எனது பெயரை கெடுக்கவும், ஓரின சேர்க்கையாளர் என தனக்கு முத்திரை குத்தவும் மறைமுகமாக அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

மேலும், ஈரானிய பெண் என் தோழி, அவளது படிப்புக்கும் அவரது அம்மாவின் மருத்துவ செலவிற்கு நான் பணம் அனுப்பி இருக்கிறேன். அந்த பெண் என் நெருங்கிய தோழியாக இருந்ததால் ராக்கி அவரை இரண்டு முறை சந்தித்து இருக்கிறான். ஐந்து வருடமாக உறவில் இருக்கும் பெண்ணை நான் எப்படி பலாத்காரம் செய்ய முடியும். அந்த ஈரானிய பெண்ணுக்கு மூன்று லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து, ராக்கி இவ்வாறு செய்யவைத்துள்ளார்.


ராக்கி சாவந்தால் என் வாழ்க்கையே போய்விட்டது, அவருக்காக ஆட்டோமொபைல் தொழில் ரூ.1.5 கோடி முதலீடு செய்தேன், நடன அக்கடமி, புரொடக்‌ஷன் ஹவுஸ், துபாயில் ஒரு பிளாட், கோரேகானில் ஒரு பிளாட், மேலும், விலையுயர்ந்த பரிசு பொருட்கள் என மொத்தம் ரூ.91 லட்சத்தை அவருக்காக செலவு செய்து இருக்கிறேன். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அவரின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement