• Sep 20 2024

இதை பற்றி எதுக்கு பேசினீங்க- கிழக்கு வாசல் சீரியல் பற்றி பேசிய மாரிமுத்துவுக்கு பதிலடி கொடுத்த நடிகர் தினேஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூடிய இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த தொடரின் வெற்றிக்கு அதில் நடித்து வரும் நடிகர்களும் முக்கிய காரணமாக திகழ்கிறார்கள். 

குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வரும் மாரி முத்துவின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அவர் வில்லத்தனமான நடிகராக இருந்தாலும், அவர் பேசும் டயலாக்குகள் ஒவ்வொன்றும் இன்று மீம் டெம்பிளேட்டுகளாக மாறி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளன.


 இதுதவிர மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, அருண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து வருகிறது. இந்த தொடரின் இயக்குநர் திருச்செல்வமும், ஜீவானந்தம் என்கிற கேரக்டரில் கலக்கி வருகிறார். 

மேலும் அதில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ள கிழக்கு வாசல் சீரியலில் முதலில் எஸ். ஏ சந்திரசேகர் நடிக்க முதல் அதில் நடிக்க என்னைத் தான் கேட்டிருந்தார்கள். நான் தான் மாட்டேன் என்று சொல்லி விட்டேன் என்று கூறியிருந்தார்.

இதனை அடுத்து பிரபல சீரியல் நடிகரான தினேஷ் மாரிமுத்து சேர் இப்படி பேசி இருக்க கூடாது.எதிர்நீச்சல் சீரியலில் கூட மாரிமுத்து சேர் செலக்டபண்ண முதல் நிறைய பேர் ஆடிசனில் கலந்து கொண்டிருப்பாங்க. அப்பிடித் தான் இவரும் கலந்து கொண்டு அதில் தனது பெஸ்டை கொடுத்திட்டு வருகிறார். அதே மாதிரி தான் கிழக்கு வாசல் சீரியலிலும் சந்திரசேகர் சேருக்கு முதல் நிறைய பேர் ஆடிஷன் போயிருப்பாங்க, இது எல்லாம் பெரிய விஷயமா பார்க்கக் கூடாது.

சந்திரசேகர் சேரும் தன்னுடைய பெஸ்டை கொடுத்து நடித்து வருகின்றார். இதை மாரி முத்து சேர் பெருசா எடுத்திருக்க வேணாம் என்று அட்வைஸ்ட் பண்ணியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement