ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் ஒரே விடயம் பாதுகாப்பாக பார்ப்பது தான். அந்த விஷயம் அமீர் கிட்ட நிறையவே இருக்கு இதனால தான் அமீரை பிடிச்சிருக்கு என பிரபல சேனல் ஒன்றிற்கு பாவனி அளித்த பேட்டி வைரலாகி வருவதைக் காணலாம்.
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் வெளியான சின்னத்தம்பி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் பாவனி. இதனைத் தொடர்ந்து இன்னும் சில சீரியல்களில் நடித்திருப்பதோடு அண்மையில் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் பங்குபற்றியிருந்தார்.
அதில் தனது கணவர் இறப்பு குறித்தும் தான் தனிமையில் வாடுவது குறித்தும் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக நுழைந்தவர் தான் அமீர். இவர்கள் இருவரும் ஆரம்பத்திலே நல்ல நய்பர்களதக இருந்தாலும் தற்பொழுது காதலர்களாக மாறியுள்ளனர்.
அதிலும் BB Jodigal நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இருவரும் பங்குபற்றி டைட்டில் வின்னர் ஆனதோடு இதனைத் தொடர்ந்தே அமீர் மீதான காதலை பாவனி வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொர்ந்து பல்வேறு சேனல்களுக்கும் பேட்டியளித்து வருகின்றனர். அந்த நிலையில் அண்மையில் பிரபல சேனலில் பேசியபோது கூறிய விடயம் வைரலாகி வருகின்றது.
அதில் அமீரை ஏன் தனக்கு பிடித்தது என்றும் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்தும் பேசியிருந்தார். அதன்படி, “எனது ஷூ லேஸ் அவிழ்ந்தால் கூட, பொது இடம் என்றும் பாராமல் உட்கார்ந்து கட்டிவிடுவார். பெண்கள் அந்த சின்ன சின்ன விசயங்களில் எப்படி ஆண்கள் கேர் செய்கிறார்கள் என்றுதான் பார்ப்போம். வேற பெருசா எதுவும் செய்ய வேண்டாம்..” என்று கூறினார்.
அத்தோடு அடுத்த வருடம் தமது திருமணம் நடைபெறும் என்னும் பிக்பாஸிற்குள் அமீர் வந்த போதே அவரைப் பிடித்து விட்டது என்றும் கூறியிருந்தார்.மேலும் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் அமீர் BB Jodigal நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!