• Sep 20 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புதிய முல்லையாக நடிக்கப்போவது இவர் தனாம்-வெளியாகிய தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் கூட்டுக்குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

மேலும் 4 அண்ணன் தம்பிகள் இடையே இருக்கும் பாசம், பிரச்சனைகள்.. குடும்ப சண்டைகள் என பல விஷயங்கள் இந்த கதையை சுவராஸ்யமாக நகர்த்தி கொண்டிருக்கிறது. 

இந்த தொடரில் இதுவரை சில நடிகர்களின் மாற்றமே நடந்தது, அதில் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கதாபாத்திர மாற்றம் தான் முல்லை வேடம்.



சித்ரா தற்கொலை செய்து இறந்தபிறகு அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க காவ்யா என்பவர் நடிக்க இப்போது தான் மக்களால் முல்லையாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.



ஆனால் அதற்குள் இப்போது முல்லையாக நடித்துவந்த காவ்யா தொடரில் இருந்து விலகிவிட்டார்.

எனினும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லையாக நடிக்கப்போவது அபிநயா என சொல்கின்றனர்.



மேலும் இவர் இதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா தோழியாக ஒரு சீனில் இவர் வந்துபோவார், இவரே சித்ராவாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. 




Advertisement

Advertisement